Home


ஃபித்ரா  எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

        ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும். முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.                அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) , நூல்: புகாரி 1503

ஈதுல் ஃபித்ர் பெருநாளன்று கொடுக்கப்படும் தானிய அறத்திற்கு இச்சொல் பயன்படுத்தப் படுகிறது. அன்று ஒரு முஸ்லிம் தனக்கும், தன்னை நம்பியுள்ள ஏனையோருக்கும் பெருநாள் உணவுக்கும், தன்னுடைய கடன்களைச் செலுத்தவும், தன்னுடைய குடும்பச் செலவுகளுக்கும் ஏற்பாடு செய்த பின் அவனிடம் பொருள் வசதி இருப்பின் அவன் ஏழை முஸ்லிம்களுக்கு ஃபித்ரா கொடுப்பது அவன் மீது ஃபர்ள் (கடமை) ஆகிறது.

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரை கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஹனஃபிகள் நபர் ஒன்றுக்கு ஒன்றரைப்படி கோதுமை வீதமோ அல்லது கிரயமோ வழங்க வேண்டும். ஷாஃபிகள் நபர் ஒன்றுக்கு புழக்கத்தில் பிரதான உணவாகக் கொள்வதில் இரண்டு படி தானியம் வழங்க வேண்டும். பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் இதனைச் செய்து விட வேண்டும். பெருநாள் தொழுகைக்குப் பின் இதனைச் செய்வது மக்ருஹ். பெருநாள் கழித்துச் செய்வது ஹராம். ஏழை அண்டை வீட்டுக்காரரோ, உறவினரோ ஃபித்ரா கொடுக்கும் சமயத்தில் ஆங்கில்லாதிருப்பின் பொழுதடையும் வரை அவருக்காக அதனை ஒதுக்கி வைத்திருந்து நல்குவது சுன்னத்து.

ஃபித்ராவின் நோக்கம்

        இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

        நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

ஒருவன் நோன்பு நோற்கும் பொழுது செய்யும் சிறு சிறு தவறுகளால் அந்நோன்புகள் விண்ணை அடையாது பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன வென்றும், அத்தடையை ஃபித்ரா கொடுப்பது நீக்கி அவற்றை விண்ணையடையச் செய்கின்றன என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

கொடுக்கும் நேரம்

        மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: புகாரி 1503, 1509

        இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும். பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

நோன்பு பெருநாளுக்கு  ‘ஈதுல் ஃபித்ர்’ என்று பெயர்

ரமலான் நோன்பு முடிந்து, ஷவ்வால் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் பெருநாள் அன்று ஃபித்ரா கொடுக்கப்படுவதால் தான் இப்பெருநாளைக்கு ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் பெயர் ஏற்பட்டது.


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....


Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.