Home


பைத்துல் முகத்தஸ்

        இஃது பைத்துல் மக்திஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ‘புனித இல்லம்’ என்பதாகும். இங்கு நபி சுலைமான் (அலை) அவர்கள் நிறுவிய பள்ளிவாயில் ஹீப்ரு மொழியில் பெத்ஹம்மிக்தஷ் என்று குறிப்பிடப்படுகிறது. அதுவே அரபியில் பைத்துல் முகத்தஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அந்நகரம் முழுவதற்கும் இதுவே பெயராக அமைந்தது. கி.பி. 136 இல் இது ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் ஆன பொழுது அவர்கள் இதனை கலோனியா ஈலியா கேப்பிட்டோலினா என்று அழைத்தனர். அதுவே சுருக்கமாக ஈலியா என்று கூறப்பட்டது. இதனையே கிருஸ்தவர்களும் ஏனையோரும் ஜெரூஸலம் என்று அழைக்கின்றனர்.

குர்ஆனில் இது பற்றி

        குர் ஆனில் பைத்துல் முகத்தஸ் என்ற சொல் இடம் பெறவில்லை ஆனால் ஹதீதுகளில் இடம் பெற்றுள்ளது. இறைவன் இஸ்ரவேலர்களை நோக்கி, “இந்நகரில் புகுந்து நீங்கள் விரும்பிய வண்ணம் தாராளமாகப் புசியுங்கள்!” (2:55) என்று கூறியுள்ளது, இந்நகரையோ, அரிஹா (ஜெரிக்கோ)வையோ ஆகும் என்று பைளாவி கூறுகின்றனர்.

        நெபுக்கட் நஸரின் படையெடுப்பால் பாழடைந்து கிடந்த அந்நகரை இறைவன் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்க செய்வான் என்று எண்ணினர் உஜைர் (அலை). இங்கு நெபுக்கட் நஸரின் படையெடுப்புக்குப் பின் இல்யாஸ் (அலை) அவர்களோ, கிள்ரு (அலை) அவர்களோ வந்துள்ளனர்.

        ஓரிரவு தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு எடுத்துச் சென்ற இறைவனுக்கே எல்லாப் புகழும் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான். இதில் மஸ்ஜிதுல் அக்ஸா (தொலையிலுள்ள பள்ளி) என்று இறைவன் கூறுவது இந்நகரில் சுலைமான் (அலை) அவர்கள் நிறுவிய பள்ளி வாயிலையேயாகும்.

பைத்துல் முகத்தஸின் சிறப்புகள்

        பைத்துல் முகத்தஸைப் பற்றி சுயூத்தி (ரஹ்) அவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளனர். அதில் இங்கேயே தாவூத் (அலை) அவர்களும், சுலைமான் (அலை) அவர்களும் ஆட்சி செய்தனர்; இங்கேயே ஜகரிய்யா (அலை) அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்கள் பிறக்கப் போவது பற்றி நன்மாராயம் வழங்கினான் இறைவன்; இங்கேயே ஈஸா (அலை) அவர்கள் வாழ்ந்தனர்; இங்கிருந்தே அவர்கள் விண்ணகம் உயர்ந்தப்பட்டனர்; உலக இறுதி நாளின் போது, அவர்கள் இங்கேயே வந்திறங்குவர்; யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் இதைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் கைப்பற்றுவர்; இங்கு வைத்தே அவர்கள் இறைவனால் அழிக்கப்படுவர்; இங்கேயே இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை), தாவூத் (அலை), சுலைமான் (அலை), மர்யம் ஆகியோர் அடங்கப் பெற்றுள்ளனர்; மறுமையில் நீதி விசாரணை நடக்கும் மஹ்ஷர்வெளி இங்கேயே அமையப் பெற்றிருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

முஸ்லிம், கிருஸ்தவ, யூதர் ஆகிய மூவர்களுக்கும் புனித நகரம்

        எனவேதான் இது முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய மூவருக்கும் புனித நகரமாக இருக்கிறது. முஸ்லிம்களுக்கு இது மக்கா, மதீனா ஆகியவற்றிற்கு அடுத்தபடியான புனித நகரமாகும். துவக்கத்தில் முஸ்லிம்கள் இதை நோக்கியே தொழுது கொண்டிருந்தனர். இங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களுக்குப் புனிதமானதாகவும், மாதாகோவில் கிறிஸ்தவர்களுக்குப் புனிதமானதாகவும் அழுகைச் சுவர் (WAILING WALL) யூதர்களுக்குப் புனிதமானதாகவும் உள்ளன.

சுருக்கமாக இதன் வரலாறு பின் வருமாறு:

  • கி.பி. 33 ஈஸா (அலை) இங்கிருந்து விண்ணகம் உயர்த்தப்பட்டனர்.
  • கி.பி. 69 ரோமானியப் பேரரசர் டைட்டஸ் இதனை வெற்றி கொண்டார்.
  • கி.பி, 136 ரோமானியப் பேரரசர் ஹட்ரியன் இதற்கு ஈலியா கேப்பிட்டோலினா எனப் பெயர் சூட்டினார்.
  • கி.பி. 336 இங்குப் கிருஸ்தவக் கோயில்கள் கட்டப்பட்டன.
  • கி.பி. 614 இதனைப் பாரசீக மன்னர் இரண்டாம் குஸ்ரூ வெற்றி கொண்டார்.
  • கி.பி. 621 இங்கிருந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களின் விண்ணேற்றம் துவங்கியது.
  • கி.பி. 628 ரோமானியப் பேரரசர் ஹெராக்ளியஸ் வெற்றி முழக்கத்துடன் இதில் நுழைந்தார். (”(நமக்குச்) சமீபமான பூமியிலுள்ள "ரூம்"வாசிகள் தோல்வி அடைந்தனர். (30:2.) அவர்கள் (இன்று) தோல்வியடைந்து விட்டபோதிலும் அதிசீக்கிரத்தில் வெற்றி அடைவார்கள். (30:3.) என்ற திருமறை வசனங்களின் படி இது நிகழ்ந்தது)
  • கி.பி. 637 உமர் (ரழி) அவர்களின் கையில் இந்நகரைப் பெரிய மதகுரு ஸொஃப்ரானியஸ் ஒப்படைத்தார்.
  • கி.பி. 969 பாத்திமியக் கலீபா முயிஸ் இதனைக் கைப்பற்றினார்.
  • கி.பி. 1084 துர்க்கோமான் தலைவர் உர்தக் இதனைக் கைப்பற்றி ஆண்டார்.
  • கி.பி. 1098 மீண்டும் இது பாத்திமியக் கிலாஃபத்தின் கீழ் ஆனது.
  • கி.பி. 1099 சிலுவைப்போர் வீரர்கள் இதனை வெற்றி கொண்டனர். எழுபதாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் காரணமாகக் குதிரைகளின் முழங்கால் அளவு இங்கு இரத்த ஆறு ஓடியது.
  • கி.பி. 1187 சுல்தான் ஸலாஹுத்தீன் இதனை வெற்றி கொண்டார். அது மிஃராஜ் இரவாக இருந்தது.
  • கி.பி. 1219 இரண்டாம் ப்ரடெரிக்குடன் செய்த உடன்பாட்டின்படி இது கிருஸ்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.
  • கி.பி. 1239 முஸ்லிம்கள் இதனை மீண்டும் கைப்பற்றினர்.
  • கி.பி. 1243 இது மீண்டும் கிருஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • கி.பி. 1244 முஸ்லிம்கள் இதனை வெற்றி கொண்டனர்.
  • கி.பி. 1277 பெயரளவில் ஸிஸிலி அரசாங்கத்துடன் இது இணைக்கப்பட்டது.
  • கி.பி. 1517 துருக்கி சுல்தான் முதலாம் ஸலீம் இதனை வெற்றி கொண்டார்.
  • கி.பி. 1832 எகிப்திய முஹம்மது அலீ பாஷா இதனைக் கைப்பற்றினார்.
  • கி.பி. 1840 இது மீண்டும் துருக்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • கி.பி. 1918 இது பிரிட்டிஷ் மாண்டேட் ஆட்சியின் கீழ் ஆனது.
  • கி.பி. 1948 இது ஜோர்டானின் ஆட்சியின் கீழ் ஆனது.
  • கி.பி. 1967 இதனை இஸ்ரேல் படைகள் கைப்பற்றின.
  • 03-12-2021 வெள்ளிக்கிழமை செய்தி (பாலஸ்தீன மஸ்ஜித் அல் அக்ஸா வளாகம் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிமையான இடம் என்றும் இஸ்ரேலிய யூத சமூகத்தினரின் கோரிக்கைகள் நிராகரித்து நேற்று ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றிய பிறகான முதல் வெள்ளிக்கிழமை இன்று ஜும்ஆ தொழுகைக்கு திரண்ட மக்கள் இவர்கள்...

ஐ.நா சபையில் ஜெருசலேம் பிராந்தியம் குறித்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மசோதா மீதான நீண்ட விவாதங்களுக்கு பிறகு நடந்த ஓட்டெடுப்பில் 11 வாக்குகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக கிடைத்தது..

129 நாடுகளின் பிரதிநிதிகள் மஸ்ஜித் அல் அக்ஸா வளாகம் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு உரிமையானது என்று ஆதரித்து வாக்களித்தனர்.

அமெரிக்க, ஹங்கேரி, செக் குடியரசு உட்பட 11 நாடுகள் மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக விவாதிக்கவும் வாக்களிக்கவும் செய்த நிலையில் பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்..

அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற உரிமை போராட்டத்தில் பாலஸ்தீன முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஐ.நா.சபையில் தங்கள் நாடுகளின் ஆதரவை பதிவு செய்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஐ.நா பிரதிநிதிகளுக்கு ஐ.நா வுக்கான பாலஸ்தீன பிரதிநிதி ரியாஸ் மன்சூர் நன்றிகள் தெரிவித்தார்.)


அறிவோம் தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....


Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.