சுத்தம்
(இஸ்லாம் பற்றிய தொடர் - 6)
அளவிலா அருளாளனும், நிகரில்லா அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனைத் தொழுவதற்குத் தூய்மையாக இருத்தல் மிகவும் அவசியமாகும். காரணம் பரிசுத்தம் ஈமானில் பாதியாகும் என ஹதீஸில் வந்துள்ளது.
“உங்களுக்கு கஷ்டத்தை தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும் அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும் தன் அருட்கொடையை உங்கள் மீது பூரணமாக்கி வைக்கவுமே விரும்புகின்றான்.” (அல் குர் ஆன் : 5:6)
தூய்மை எனக் குறிப்பிடும் போது உள்ளத்தூய்மை, உடல் தூய்மை, உடைத் தூய்மை மற்றும் இருப்பிடத்தூய்மை போன்றவையும் அடங்குகின்றன.
“உமதிறைவனைப் பெருமைப்படுத்தும், ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும். அசுத்தங்களை வெறுத்திடும்.” (அல்குர் ஆன்: 74: 4, 5)
உடல் தூய்மை இரு வகையாக இருக்கின்றது. ஒன்று பகுதித் தூய்மை, மற்றொன்று முழுத்தூய்மை, பகுதித் தூய்மைக்கு உதாரணமாகப் புற உறுப்புக்களைக் கழுவுவதைச் சொல்லலாம். இது போல முழுத் தூய்மைக்கு முழுக்கை நிறைவேற்றும் குளிப்பைச் சொல்லலாம்.
முழுக்கு
இந்திரியம் வெளிப்பட்டாலும் அல்லது உடலுறவு ஏற்பட்டாலும் முழுக்கு எனப்படும். முழுக்கை நீக்க குளித்து உடல் முழுவதையும் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். எனவே தான் முழுக்கினை முழுத்தூய்மைக்கு உதாரணம் காட்டப்படுகிறது.
திருமறையில் அல்லாஹ் முழுக்கினைப் பற்றி கூறுமிடத்து
“நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.” (அல் குர் ஆன் : 5:6)
“நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்.)” (அல் குர் ஆன் : 4:43) எனக் கூறுகின்றான்.
குளிப்பு எப்பொழுது கடமையாகின்றது.
எப்படிக் குளிப்பது
முழுக்கின் பர்ளுகள் (ஹனபி)
குளிப்பு எப்போது நிறைவேறாது :
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பர்ளுகளில் ஒன்று விடுபட்டாலும் உடலில் இம்மியளவு கழுவாது விடுபட்டுப் போனாலும் குளிப்பு நிறைவேறாது.
குளிப்பு கடமையுள்ளவர்கள் செய்யக்கூடாதவை :
ஒலு
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். அன்றி, (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) "மஸஹு" செய்து கொள்ளுங்கள்.” (அல் குர் ஆன் : 5:6)
அல்லாஹு த ஆலா ஒலுவினை திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மூலமாக மக்களுக்கு காண்பித்துள்ளான். உடலின் முகம், கை, கால், தலை, காது, மூக்கு போன்ற அவயங்கள் ஆடையின்றித் திறந்திருப்பதால் அழுக்கும், தூசிகளும் படிகின்றன. இவ்வாறு படிகின்ற அழுக்கு, தூசி போன்றவைகளை ஐங்காலத் தொழுகையின் போது ஒலு என்ற முறையில் முகம், கை, கால் இவைகளைக் கழுவப் படுகிறது. இவ்வாறு செய்யும் போது உடல் உறுப்புக்கள் பரிசுத்தமடைகின்றன. இதை ஒலு என்று சொல்லப்படுகிறது.
ஒலுவினைப் பற்றி அண்ணல் நபி
ஒலு | ஹனபி | ஷாபி |
பர்ளுகள் | 4 | 6 |
சுன்னத்துகள் | 13 | 9 |
முறிப்பவை | 10 | 5 |
பர்ளுகள் 4 (ஹனபி)
பர்ளுகள் 6 (ஷாபி)
ஒலுவின் சுன்னத்துகள் 13 (ஹனபி)
ஒலுவின் சுன்னத்துகள் 9 (ஷாபி)
மிஸ்வாக் (நார் உள்ள குச்சி)
நார் உள்ள குச்சியால் பற்களை சுத்தம் செய்வதற்கு மிஸ்வாக் என்று பெயர். இது சுன்னத் ஆகும். மிஸ்வாக் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாவது.
ஒலுவை முறிப்பவை 10 (ஹனபி)
ஒலுவை முறிப்பவை 5 (ஷாபி)
தயம்மும்
தண்ணீர் கிடைக்கா விட்டாலும் அல்லது தண்ணீரை உபயோகிப்பதால் வியாதி அதிகமாகுமென்று அச்சமிருந்தாலும் அல்லது எதிரிகளின் பயமிருந்தாலும் ஒலுவுக்குப் பிரதியாகச் செய்யும் துப்புரவுக்குத் தயம்மும் என்று பெயர்.
திருக்குர் ஆனில் தயம்மும்
“நீங்கள் நோயாளிகளாக இருந்தோ அல்லது பயணத்தில் இருந்தோ அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தோ அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தோ (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதனை)க் கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான்.” (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக! ( அல் குர் ஆன் : 5:6)
தயம்மும் செய்வதற்கு நிபந்தனைகள்
மேலே கூறப்பட்ட ஆறு காரணங்களுள் எதுவும் இருந்தால் மட்டுமே தயம்மும் செய்ய அனுமதியுண்டு.
தயம்முமின் பர்ளுகள்
தயம்மும் செய்ய உபயோகிக்கும் பொருள்கள்
மண் இனத்தைச் சார்ந்தவைகள் மட்டும் தயம்மும் செய்ய உரியவைகள். அவை பின்வருமாறு
மேற்குறிப்பிட்ட மண் இனத்தைச் சார்ந்த ஐந்திலும் புழுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தயம்மும் செய்யலாம். அதே நேரத்தில் மண் இனம் அல்லாத தங்கம், வெள்ளி, சாம்பல், கோதுமை, இரும்பு இவைகளின் மீது புழுதி ஒட்டியில்லாத நிலையில் தயம்மும் செய்தல் கூடாது.
தயம்மும் எப்போது முறிகின்றது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.