Home


இஸ்லாமியப் பண்பாடு தொடர் - 6

இஸ்லாத்தில் ஸலாம் சொல்லும் முறை

        உலகில் தோன்றியுள்ள மதங்களில் “பண்பாடு” என்ற சொல்லுக்குப் பாத்திரமாகப் பழக்கங்களை - முறையாகக் கொண்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது. அதைக் கடைப்பிடிக்கும் போது தனக்கும் நன்மை, சமுகத்துக்கும் உண்டாக்கிய நன்மை பயக்கும்.

        இறுதி நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி மூச்சின் போது கூறியது. இங்கு நினைவு கொள்ளத் தக்கது. “நான் இரண்டு விஷயங்களை உங்களிடையே விட்டுச் செல்கிறேன். ஒன்று திருக்குர்ஆன், மற்றொன்று என் வழி இதனை நீங்கள் பற்றிப் பிடித்துக் கொள்ளும் வரை ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள்”.

        மேற்கூறிய ஹதீஸின் படி இஸ்லாமியப் பண்பாடு என்பது திருக்குர்ஆன் நெறி நடப்பதும், திரு நபி வழி தொடர்வதும் ஆகும் எனத் தெளிவாகத் தெரிகின்றது.

        இஸ்லாம் என்ற சொல்லுக்கு ‘சாந்தி’ ‘அமைதி’ எனப் பொருள் படும். இஸ்லாமியப் பண்பாட்டைக் கடைப் பிடித்தால் தனக்கும், தன்னைச் சார்ந்தோருக்கும், இப்பூவுலகுக்கும் சாந்தி கிடைக்கும். “Islam is not a religion but a way of life” “இஸ்லாம் என்பது ஒரு மதம் அன்று; அது ஒரு வாழ்க்கைப் பாதை” என்ற கூற்று பிரபலமான ஒன்று.

ஸலாம் சொல்லும் முறை :

  1. ஒரு முஸ்லிமைச் சந்திக்கும் போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என ஸலாம் சொல்ல வேண்டும். கேட்பவர் ‘வ அலைக்கு முஸ்ஸலாம்’ எனப் பதில் கூற வேண்டும்.
  2. முதலில் ஸலாம் கூறுபவருக்குப் பத்து நன்மைகளும், பதில் கூறுபவருக்கு ஒரு நன்மையும் கிடைக்கும். (ஹதீஸ்)
  3. மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொல்லுவது சுன்னத். உடனடியாக பதில் சொல்லுவது வாஜிபு. காரணமின்றி பதிலைப் பிற்படுத்தக் கூடாது.
  4. சிறியோர் பெரியோருக்கும், ஆண் பெண்ணிற்கும், வாகனத்திலிருப்பவர் நடந்து வருபவருக்கும், நடந்து வருபவர் உட்கார்ந்திருப்பவருக்கும், குறைவான எண்ணிக்கையில் இருப்பவர் அதிக எண்ணிக்கையில் உள்ளோருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும். ஒரு மனிதர் ஒரு கூட்டத்திற்கு ஸலாம் சொன்னால் அக்கூட்டத்திலுள்ள ஒருவர் பதில் சொன்னால் போதுமானது.
  5. தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வதும், உணவளிப்பதும் சிறந்த இஸ்லாமாகும். (ஹதீஸ்)
  6. தொழுபவருக்கும், குர் ஆன் ஓதுபவருக்கும், தீனுடைய தஃலீம் மஜ்லிசில் உட்கார்ந்திருப்பவருக்கும், மலஜலம் கழித்துக் கொண்டிருப்பவருக்கும், உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பவருக்கும், குளிப்பவர், தூங்குபவர், ஆழ்ந்த சிந்தனையிலிருப்போர் ஆகியோருக்கு ஸலாம் சொல்லக் கூடாது.
  7. முஸ்லிம் அல்லாதவர் ஸலாம் சொன்னால் “வஸ்ஸலாமு அலா மனித்தப அல்ஹுதா” எனப் பதிலுடன் துஆவும் செய்வது நல்லது.
  8. எவராவது ஒருவர் மூலம் ஸலாம் சொல்லியனுப்பினால் “அலைக்க வ அலைஹிஸ்ஸலாம்” எனப் பதில் கூற வேண்டும்.


இஸ்லாமியப் பண்பாடு தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.