Home


இஸ்லாமியப் பண்பாடு தொடர் - 5

இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள்

ஆடை அணியும் முறை

  1. ஆண்கள் தொப்புளிலிருந்து முழங்கால் முட்டுவரை மறைப்பது பர்ளு என்னும் கட்டாயக் கடமையாகும்.
  2. தலையில் தொப்பியுடன், கை மணிக்கட்டு வரை ஆடை அணிவது சிறந்தது.
  3. ஆடையை கரண்டைக் கால் மொளிக்குக் கீழ் (தரையில் இழுபடும் வண்ணம்) உடுத்துவது கூடாது.
  4. ஆண்கள் வெள்ளை ஆடை அணிவது விரும்பத்தக்கது.
  5. ஆண்கள் பட்டாடை, தங்க ஆபரணம் அணிதல் கூடாது. பெண்களுக்குக் கூடும்.
  6. பெண்கள் இரு கரண்டைக் கை, இரு பாதங்கள், முகம் தவிர, மற்ற உறுப்புக்களையும் மறைப்பது (பர்ளு) கட்டாயக் கடமையாகும்.
  7. ஆடை  அணியும்  போது ஓதும் துஆ : அல்ஹம்து லில்லாஹில்லதீ கசானீ ஹாத(ஸ்ஸவ்ப) வரசகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.                            பொருள் :  (எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனே இந்த ஆடையை எனக்கு அணிவித்தான். என்னிடத்தில் எந்த ஆற்றலும் திறமையுமின்றி இதனை எனக்கு அணிவித்தான்)      ஆதாரம் : அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா.
  8. புத்தாடை அணியும் போது சொல்லும் துஆ :   அல்ஹம்து லில்லாஹில்லதீ கசானீ மா உவாரி பிஹீ அவ்ரத்தீ வ அதஜம்மலு பிஹி ஹயாதீ.

        பொருள் : எனக்கு ஆடை அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அதைக் கொண்டு என் மர்மஸ்தானத்தை மறைத்துக் கொண்டேன். மேலும் எனது வாழ்க்கையை அழகிய முறையில் ஆக்கிக் கொண்டேன்.

இது பற்றி அல்குர்ஆன்

24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

        24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.


இஸ்லாமியப் பண்பாடு தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.