ஆற்றங்கரை நாச்சியார்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெட்டைக்குளத்துக்குத் தென் மேற்கே உள்ள ஊராகும் ஆற்றங்கரை. இறைநேசச் செல்வி பாத்திமாவும், அவரின் கணவர் ஷைகு முஹம்மது அலீயும் இங்கே அடங்கப் பெற்றுள்ளனர்.
இவர்கள் அரபு நாட்டிலிருந்து வந்து மலையாளக் கரையில் இறங்கி ஆறு பேர்களுடன் பெட்டைக்குளம் போக எண்ணி இவ்வழியே வந்தவர்கள். தங்களுக்கு விரைவில் இறையழைப்பு வருவதை உணர்ந்து இங்குத் தங்கினர். தம்முடன் வந்த ஆறு பேர்களையும் அழைத்துத் தங்களின் இறுதி நெருங்கி விட்டதென்றும் புலிமாங்குளத்தில் உள்ள கரையாளர் வந்து ஆவன செய்வாரென்றும் கூறி இறந்தனர்.
அன்றிரவே அவரின் கனவிலும் தங்களது வரவையும் இறப்பையும் உரைத்துத் தங்களை நல்லடக்கம் செய்யுமாறு பணித்து விட்டு மறைந்தனர். அவ்வாறே அவர் வைகறையில் வந்து தாம் கண்ட கனவின் படி நிகழ்ந்துள்ளதை பார்த்து இவர்கள் இருவரையும் நல்லடக்கம் செய்து தர்கா அமைத்தார்.
அவர்கள் இருவரும் இறப்பெய்திய நாள் ஹிஜ்ரி 1050 ரபீயுல் அவ்வல் பிறை 14 வெள்ளி இரவாகும். அந்நாளில் இவர்களின் நிணைவு நாள் விழா ஆண்டு தோரும் நடைபெறுகிறது.
வெள்ளி, திங்கள் இரவுகளில் இஙகு அதிகமான பேர்கள் நேர்ச்சைக்காக வருகிறார்கள். நோயாளிகளும் பேய் பிடித்தவர்களும் இங்கு வந்து தங்கி நலம் பெற்று செல்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு இங்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
சையிது இப்ராஹீம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஷைகு உதுமான் வலியுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.