Home


பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

(சையிதுல் இஸ்த்திக்ஃபார்)

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ, லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ, வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க, வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து, அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து, அபூவு ல(க்)க பினிஃமதி(க்)க அலய்ய, வஅபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீ, ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த.


பொருள் :

        என் இறைவா! நீயே என் இரட்சகன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடியானாக இருக்கின்றேன். உனது உடன்படிக்கையின் படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருட்கொடைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் செய்த பாவங்களையும் உன் முன்னால் ஒப்புக்கொள்கிறேன். எனவே என்னை மன்னித்தருள்வாயாக!. ஏனெனில் நிச்சயமாக உன்னைத் தவிர  பாவங்களை மன்னிப்பவர் யாருமில்லை.

ஆதாரம்: புகாரி

        மேல்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

Bdur

சூர‌த்துல் இஃக்லாஸ் (ஏக‌த்துவ‌ம்)...

Abubakr

சூரத்துல் ஃபலக்(அதிகாலை) & சூரத்துந் நாஸ்(மனிதர்கள்).

Abu Bakar RA

ஆயத்துல் குர்ஸி