அடக்குமுறை யாளர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் துஆ
ரப்பனா அக்ரிஜ்னா மின் ஹாதிஹில் கர்யதிள் ளாலிமி
அஹ்லுஹா வஜ்அல்லனா மில்லதுன்க வலிய்யா,
வஜ்அல்லனா மில்லதுன்க நசீரா.
ஸூரத்துன்னிஸாவு 4:75
பொருள் :
“எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக”
ஆதாரம் : அல் குர் ஆன் - ஸூரத்துன்னிஸாவு 4:75
விளக்கம் : மக்காவில் எதிரிகள் கொடுத்த தொல்லைகள் எல்லை மீறிச் சென்ற போது அண்ணல் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்கள் பலரும் மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறினார்கள். இவ்வாறு ஹிஜ்ரத் செய்வதற்கு இயலாத மக்காவில் தங்கிவிட்ட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வேண்டுதல் துஆ இது.