நல்லோர்களோடு சேர்த்து வைக்க வேண்டும் துஆ
ஃபாதிரஸ் ஸமவாத்தி வல் அர்ளி
அன்த வலிய்யீ ஃபித்துன்யா வல் ஆகிரத்தி,
தவஃப்பனீ முஸ்லிமன்
வஅல்ஹிக்னீ பிஸ்ஸாலிஹீன்.
(ஸூரத்து யூஸுஃப் 12:101)
பொருள் :
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!”
ஆதாரம்: ஸூரத்து யூஸுஃப் 12:101
விளக்கம் : நபி யூஸுஃப் (அலை) அவர்கள் கேட்ட துஆ