Home


குழந்தை பாக்கியம் வேண்டும் துஆ

ரப்பி லா ததர்னீ ஃபர்தவ்

வஅன்த கைருல் வாரிசீன்

ஸூரத்துல் அன்பியா 21:89

பொருள் :

        "என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசாகக்கூடிய வர்களில் மிக்க மேலானவன்"

ஆதாரம் :

        அல்குர்ஆன் - ஸூரத்துல் அன்பியா 21:89

விளக்கம் :

21:89. ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் தன் இறைவனை நோக்கி "என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசாகக்கூடிய வர்களில் மிக்க மேலானவன்" என்று பிரார்த்தனை செய்த சமயத்தில்,

21:90. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம்முடைய அருளை) விரும்பியும் (நம்முடைய தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

 

முன்னர் வெளி வந்த துஆக்கள் மீண்டும் கேட்க படத்தில் கிளிக் செய்யவும்
Mohammed Nabi SAW

சூரத்துல் ஃபாத்திஹா, இது திருக்குர் ஆனின் மாண்பார்ந்த முதல் அத்தியாயமாகும்....

duaforparents

நமது பெற்றோர்களுக்கான துஆ ...

Dua Musa Nabi

தவறுகள் செய்யும் மக்களிடமிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும் துஆ

Dua for Patience

பொறுமைக்கான துஆ